செய்திகள் இந்தியா
பிஎம் கேர்ஸ் நிதியைக் கொண்டு ஆதரவற்ற சிறார்களுக்கு உதவுங்கள்: உச்ச நீதிமன்றம்
புது டெல்லி:
கொரோனாவால் பெற்றோரை இழந்த சிறார்களுக்கு பிஎம்கேர்ஸ் நிதி மூலமாக வழங்கப்பட்டு வரும் உதவிகளை போல் ஆதரவற்ற சிறார்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது.
ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜீத் பானர்ஜியிடம் நீதிபதிகள் கூறுகையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறார்களுக்கு மத்திய அரசு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
பிஎம்கேர்ஸ் நிதி மூலமாக அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், மற்ற காரணங்களால்கூட சிறார்கள் ஆதரவற்ற நிலையை அடையலாம். குறிப்பிட்ட சூழல் அடிப்படையில் ஆதரவற்றவர்களாக மாறிய சிறார்களுக்கு மட்டும் திட்டங்களைச் செயல்படுத்துவது முறையாக இருக்காது.
அத்தகைய திட்டங்களை அனைத்து ஆதரவற்ற சிறார்களுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
