
செய்திகள் இந்தியா
பிஎம் கேர்ஸ் நிதியைக் கொண்டு ஆதரவற்ற சிறார்களுக்கு உதவுங்கள்: உச்ச நீதிமன்றம்
புது டெல்லி:
கொரோனாவால் பெற்றோரை இழந்த சிறார்களுக்கு பிஎம்கேர்ஸ் நிதி மூலமாக வழங்கப்பட்டு வரும் உதவிகளை போல் ஆதரவற்ற சிறார்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது.
ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜீத் பானர்ஜியிடம் நீதிபதிகள் கூறுகையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறார்களுக்கு மத்திய அரசு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
பிஎம்கேர்ஸ் நிதி மூலமாக அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், மற்ற காரணங்களால்கூட சிறார்கள் ஆதரவற்ற நிலையை அடையலாம். குறிப்பிட்ட சூழல் அடிப்படையில் ஆதரவற்றவர்களாக மாறிய சிறார்களுக்கு மட்டும் திட்டங்களைச் செயல்படுத்துவது முறையாக இருக்காது.
அத்தகைய திட்டங்களை அனைத்து ஆதரவற்ற சிறார்களுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2023, 11:31 pm
பாஜக கூட்டணியில் தேவகவுடா கட்சி இணைந்தது
September 23, 2023, 8:56 pm
4 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தலைவர் விடுதலை
September 23, 2023, 10:05 am
நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளிபட்டபோதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை - இஸ்ரோ
September 22, 2023, 5:17 pm
இந்திய மருத்துவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்
September 22, 2023, 3:10 pm
கனடாவினருக்கான விசாவை நிறுத்தியது இந்தியா
September 22, 2023, 3:01 pm
சிறையில் சந்திரபாபு நாயுடுவை கொல்ல சதி: மகன் புகார்
September 22, 2023, 11:47 am
நாடாளுமன்ற தேர்தல் பணி; மக்கள் நீதி மய்யம் ஆலோசனை நடத்துகிறது
September 22, 2023, 10:30 am
நிலவில் உறக்க நிலையிலுள்ள லேண்டர், ரோவர் மீண்டும் இயங்குமா?: முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்
September 21, 2023, 4:51 pm
லேண்டர், ரோவரை விழிக்க செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்கியது
September 21, 2023, 9:39 am