![image](https://imgs.nambikkai.com.my/5-2b3d1.jpg)
செய்திகள் உலகம்
லிபியாவில் நிகழ்ந்த கோரத்தின் மரண எண்ணிக்கை 11,000த்தை தாண்டியது
டெர்னா :
லிபியாவில் நிகழ்ந்த கோரச் சம்பவத்தின் மரண எண்ணிக்கை 11,000த்தை தாண்டியது
டேனியல் புயல்காற்று தாக்கிய போது அணைக்கட்டுகள் உடைந்ததில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர்.
அணைக்கட்டுகள் உடைந்ததற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
உடைந்த இரண்டு அணைக்கட்டுகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டுமே 1970களில் கட்டப்பட்டவை.
குறிப்பாக உடைந்த இரண்டு அணைக்கட்டுகளில் 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் சீர்செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நேர்ந்தபோது குடியிருப்பாளர்களுக்கு முறையான தகவல்கள் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விகளும் இப்போது முன்வைக்கப்படுகின்றன.
மரணமடைந்தோரின் எண்ணிக்கை 11,000த்தை தாண்டியது.
இன்னும் 10,000 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 12:27 pm
பூமிக்குத் திரும்புவதில் சுனிதா வில்லியம்ஸ் தாமதம்
July 26, 2024, 11:02 am
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்
July 25, 2024, 2:28 pm
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இலங்கைக்கு 93ஆவது இடம்
July 25, 2024, 12:46 pm
வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்க அமீரகத்தில் சுகாதார காப்பீடுடன் கூடிய சுற்றுலா விசா
July 25, 2024, 10:28 am
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரித்ததற்காக இலங்கை அரசு மன்னிப்பு கோருகிறது
July 25, 2024, 9:57 am
நெட்டன்யாஹுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் ஆர்ப்பாட்டங்கள்
July 24, 2024, 5:42 pm