செய்திகள் இந்தியா
80 ஆண்டுகளாக ஓடிய மும்பையின் டபுள் டக்கர் பேருந்துகள் நிறுத்தம்
மும்பை:
சுமார் 80 ஆண்டுகளாக மும்பையில் வலம் வந்த டீசலில் இயங்கும் டபுள் டக்கர் பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
1937ம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்துகள் மும்பாய் நகரில் அறிமுகமாகின. 1990களில் இதன் எண்ணிக்கை 900க்கும் அதிகமாக இருந்தது. இவை மாநகரின் அடையாளமாகவே இருந்து வந்தன.
அண்மைக் காலமாக மின்சாரத்தில் இயங்கும் டபிள் டக்கர் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கின. ஆகையால், டீசலில் இயங்கி வந்த இந்த சிவப்பு வாகனங்கள் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இவை முற்றிலுமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன. கடைசி நாள் நினைவாக மும்பை மாநகர பேருந்து பணியாளர்கள் சிவப்பு நிற டபுள் டக்கர் பேருந்துகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சிவப்பு நிற அரசுப் பேருந்துகள் மும்பை வீதிகளிலிருந்து அகற்றப்பட்டாலும், அவற்றுக்கு மாற்றாக சிவப்பு-கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் 25 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
