
செய்திகள் இந்தியா
80 ஆண்டுகளாக ஓடிய மும்பையின் டபுள் டக்கர் பேருந்துகள் நிறுத்தம்
மும்பை:
சுமார் 80 ஆண்டுகளாக மும்பையில் வலம் வந்த டீசலில் இயங்கும் டபுள் டக்கர் பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
1937ம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்துகள் மும்பாய் நகரில் அறிமுகமாகின. 1990களில் இதன் எண்ணிக்கை 900க்கும் அதிகமாக இருந்தது. இவை மாநகரின் அடையாளமாகவே இருந்து வந்தன.
அண்மைக் காலமாக மின்சாரத்தில் இயங்கும் டபிள் டக்கர் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கின. ஆகையால், டீசலில் இயங்கி வந்த இந்த சிவப்பு வாகனங்கள் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இவை முற்றிலுமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன. கடைசி நாள் நினைவாக மும்பை மாநகர பேருந்து பணியாளர்கள் சிவப்பு நிற டபுள் டக்கர் பேருந்துகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சிவப்பு நிற அரசுப் பேருந்துகள் மும்பை வீதிகளிலிருந்து அகற்றப்பட்டாலும், அவற்றுக்கு மாற்றாக சிவப்பு-கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் 25 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm