
செய்திகள் தொழில்நுட்பம்
அமைதி பேரணிக்காக சாலைகளை மூடும் திட்டம் இல்லை - கோலாலம்பூர் காவல்துறை
கோலாலம்பூர் :
நாளை மலேசியாவைக் காப்பாற்றுவோம் என்ற அமைதி பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பேரணிக்காகச் சாலைகளை மூடத் திட்டமிடப்படவில்லை என்று கோலாலம்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
சாலையை மூடும் நடவடிக்கையால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜிட் கூறினார்.
கோலாலம்பூர் காவல்துறை குழு போக்குவரத்தை சீராகச் செய்வதில் தயார் நிலையில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஜமேக் கம்போங் பாரு மசூதியில் இருந்து தலைநகரைச் சுற்றியுள்ள எந்த இடத்திற்கும் பேரணியை நடத்துவதற்கு பேரணி அமைப்பாளர்கள் திட்டமிட்டால், தனது தரப்பு தயாராக இருப்பதாக அல்லாவுதீன் கூறினார்.
பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அணிவகுப்பு நடத்தினால் சாலையை மூடுவதா அல்லது தடுப்பதா என்பதை பேரணியின் போது நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.
இந்தக் கூட்டத்தில் பொது மக்கள் பங்கேற்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர் காவல் துறையினர் சட்டத்திற்குப் புறம்பான எந்த விஷயத்தையும் கண்காணித்து மேற்பார்வை செய்வார்கள்.
தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்பவர்கள் மீது காவல்துறை சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am
மோசமான வானிலையால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் நாளை ஒத்திவைக்கப்பட்டது.
June 8, 2025, 5:12 pm