நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக 3-ஆவது சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது - இஸ்ரோ அறிவிப்பு 

பெங்களூரு: 

கடந்த 2-ஆம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தைச் சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. 

பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 3-ஆவது புவி சுற்றுவட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்ப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், 15-ஆம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset