நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிங்கப்பூர் - இந்தியா நீதித்துறையில் ஒத்துழைப்பு

புது டெல்லி:

சிங்கப்பூரும் இந்தியாவும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இரு நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனை  அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இரு நாடுகளின் உச்ச நீதிமன்றங்களுக்கு இடையே நீதித்துறை ஒத்துழைப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொழுத்தானது என உச்ச நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 73ஆவது ஆண்டு தொடக்க விழாவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பங்கேற்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset