செய்திகள் இந்தியா
கட்சிக்குள் ஜாதிய ஏற்றுத் தாழ்வுகள் மலிந்துள்ளன - நேதாஜியின் கொள்ளுப்பேரன் பாஜகவில் இருந்து விலகல்
கொல்கத்தா:
அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைப்பதற்கு பாஜக அனுமதிக்காததால் அக் கட்சியில் இருந்து வெளியேறியதாக மேற்குவங்க பாஜக மாநில முன்னாள் துணைத் தலைவரும், நேதாஜியின் சகோதரரர்வழி கொள்ளுப்பேரனுமாகிய சந்திரபோஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில்,
நேதாஜியின் சிந்தனைகளான ஜாதி, மதம், நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைப்பதே ஆகும்.
இதை பற்றி பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பாஜக எனக்கு வாக்குறுதி அளித்தது.
அதற்கான எனது தீவிர முயற்சிகளுக்கு பாஜகவில் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
ஆனால், கட்சிக்குள் ஜாதிய ஏற்றுத் தாழ்வுகள் அதிகம் உள்ளன. அதைத் தலைவர்கள் மறைமுகமாக ஆதரிப்பதை நான் பார்க்கிறேன். எனவே, கட்சியை விட்டு நான் வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am