நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜி20 மாநாட்டை முன்னிட்டு டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

புதுடில்லி: 

இந்தியாவில்  நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டை முன்னிட்டு அதன் தலைநகரமான டில்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகை புரிகிறார். 

மேலும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகிய தலைவர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். 

பாதுகாப்பு பணிக்காக 1 லட்சத்து 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஜி20 மாநாட்டையொட்டி ஜமா மசூதி வண்ண மின் விளக்குகள் மற்றும் பல வண்ண குடைகள், மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

ஜி20 மாநாடு நாளையும் நாளை மறுநாளும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியா இந்த முறை ஜி20 மாநாட்டின் உபசரணை நாடாக உள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset