நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இராக்கில் பேருந்து கவிழ்ந்து 18 பேர் பலி

பாக்தாத்:

இராக்கில் புனிதப் பயணம் சென்றவர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.

ஷியா பிரிவு முஸ்லிம்களின் அர்பயீன் புனிதப் பயணத்துக்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் கர்பாலா நகருக்கு ஏராளமானவர்கள் ஆண்டுதோறும் வந்து செல்வது வழக்கம்.

கர்பாலா புனிதத் தலத்தை நோக்கி ஏராளமான புனிதப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, தலைநகர் பாக்தாதுக்கு 55 கி.மீ. தொலைவிலுள்ள பலாட் என்னும் ஊர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 3 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 10 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள், 2 பேர் இராக்கியர்களாவர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset