நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஆதித்யா எல்-1' திட்ட இயக்குனர் தமிழகப் பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை: 

சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் பாய்ந்தது.

இதன் திட்ட இயக்குனராக தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி இருந்துள்ளார் என்பது தமிழர்களுக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான 'ஆதித்யா எல்-1' திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். 

தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். 

இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் ஷாஜி தலைமை பொறுப்பேற்றிருப்பதை பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பைப், பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன் என்று முதலமைச்சர் கூறினார். 

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset