செய்திகள் தமிழ் தொடர்புகள்
ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: பாஜகவின் கண்ணசைவா?
சென்னை:
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கி, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி கைப்பற்றினார்.
அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு செல்லாது என உச்சநீதிமன்றம் வரை சென்றும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு வரை சென்றும், அவருக்குசாதகமாக தீர்ப்பு அமையவில்லை.
இந்நிலையில் மக்கள் மன்றமே தீர்வு எனக் கருதி, மாவட்ட வாரியாக தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கும் விதமாக பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓபிஎஸ் நேற்று சந்தித்து, ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப் பயணம் சென்றார். அதன் பின்னர் பாஜக பிரமுகர்களை ரஜினிகாந்த் தொடர்ச்சியாக சந்தித்து வந்தார். குறிப்பாக, ஜார்கண்ட் ஆளுநரும் பாஜக முன்னணித் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்தார்.
பெயரளவிற்கு அகிலேஷ் யாதவையும் அவர் சந்தித்து வைத்தார்.
இருப்பினும், ரஜினிகாந்த் துவக்கம் முதலே பாஜகவின் அனுதாபியாக இருப்பதோடு முக்கியமான முடிவுகள் எடுப்பதில் துணை நிற்கிறார் என்பது அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சென்னை திரும்பிய அவரை, தற்போது ஓபிஎஸ் சந்தித்துள்ளது மரியாதை நிமித்தமானது எனக் கூறப்பட்டாலும், அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் பாஜக மேலிடம் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.
ஓபிஎஸ் பாஜகவின் சொல்படிதான் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தங்கள் சொல்படி நடக்கும்படி பாஜக திட்டமிட்டு கையாள்கிறது என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am