நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்

பெங்களூரு : 

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ உருவாக்கியுள்ள ஆதித்யா எல் - 1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் இன்று காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

(இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்தது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

சூரியனை கண்காணித்து ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் என்ற பெருமையை ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது. 

விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்ற இடத்தில் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. 

விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளன.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராகத் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை                                                                                                                                                                                    

தொடர்புடைய செய்திகள்

+ - reset