செய்திகள் தமிழ் தொடர்புகள்
சூறைக் காற்றால் கரை ஏற முடியாமல் கடலில் தத்தளித்த ஒன்றிய அமைச்சர்கள்
நாகர்கோவில்:
சூறைக்காற்றால் கரைக்கு திரும்ப முடியாமல் கன்னியாகுமரி மாவட்ட கடலில் மத்திய அமைச்சர்கள் தவித்தனர்.
இந்திய கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் ‘சாகர் பரிக்ரமா’ என்ற கடலோர யாத்திரை மத்திய அரசு சார்பில் நடந்துவருகிறது.
குஜராத்தில் தொடங்கிய யாத்திரை கடல்வழியாக நேற்று காலை கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தை வந்தடைந்தது.
யாத்திரைக் குழுவில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீபர்ஷோத்தம் ரூபாலா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான நவீன படகில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்துக்கு யாத்திரை குழுவினர் புறப்பட்டனர்.
ஒன்றிய அமைச்சர்களை கரைக்கு அழைத்துவர தேங்காய்
பட்டினம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவ பிரதிநிதிகள் சென்றனர்.
துறைமுகம் அருகே ஒருநாட்டிக்கல் மைல் தொலைவில் யாத்திரை குழுவினர் கடற்படை படகில் வந்தபோது, சூறைக்காற்று பலமாக வீசியது.
இதனால் மத்திய அமைச்சர்கள் மற்றும் அவர்களுடன் வந்த அதிகாரிகள், கடற்படை படகில் இருந்து கரைக்கு அழைத்துவரச் சென்ற விசைப்படகில் ஏற முடியாமல் தவித்தனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடற்படை படகிலேயே அர்ந்திருந்தனர். காலை 11 மணிக்கு பின்னர் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது.
அதன் பின்னர் மீனவ பிரதிநிதிகள் சென்ற விசைப்படகில் ஏறி தேங்காய்பட்டினம் துறைமுக பகுதிக்கு மத்திய அமைச்சர்கள் வந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am