செய்திகள் இந்தியா
லஞ்ச வழக்கில் சிக்கிய அமலாக்கத் துறை அதிகாரிகள்: சிபிஐ விசாரணை
புது டெல்லி:
தில்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் பவன் கத்ரி, அத் துறையின் எழுத்தர் நிதீஷ் கோஹர் மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அவர்கள் மீதான பணப் பரிமாற்ற வழக்கை அமலாக்கத் துறையே விசாரிக்கிறது.
சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் கண்காணித்த அமலாக்கத் துறை, சிபிஐக்கு புகார் அளித்து ஊழல் வழக்கில் சேர்த்துள்ளது.
தில்லியில் புதிய மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்க கொண்டு வரப்பட்ட கலால் கொள்கைகள், தனியார் மதுபான தொழிலதிபர்களுக்கு சாதகமாக அமைந்ததாகவும் அதில் ஊழல் நடைபெற்றதாகவும் துணைநிலை ஆளுநர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, இந்த புதிய கொள்கைகளை முதல்வர் கேஜரிவால் அரசு திரும்பப் பெற்றது.
இந்த ஊழல் வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மதுபான தொழிலதிபர் அமன்தீப் தால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் ரூ.5 கோடி வரையில் லஞ்சம் வழங்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அமலாக்கத் துறை அதிகாரியின் மீதே லஞ்ச புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm