செய்திகள் உலகம்
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் வரலாறு காணாத பலிகள்: ஐ.நா. தூதர்
நியூயார்க்:
இஸ்ரேலியப் படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையில் நிகழாண்டு முதல் நடைபெற்று வரும் மோதல் பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக மேற்கு ஆசிய நாடுகளுக்கான ஐ.நா. தூதர் டார் வெனெஸ்லாண்ட் தெரிவித்தார்.
நிகழாண்டில் மட்டும் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், 30 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்துவதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு சில அடிப்படை பிரச்சனைகள் களையப்பட வேண்டும் என்றும் இவர் தெரிவித்தார்.
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தீவிர வலதுசாரி அரசு பாலஸ்தீனத்தின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவதாகக் கூறி, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேலியர்கள் மீது பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்து வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm