நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இங்கிலாந்தில் 7 குழந்தைகளைக் கொன்ற தாதிக்கு  ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க உத்தரவு

லண்டன்:

பிரித்தானியாவில் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைக் கொலை செய்த குற்றத்திற்காக தாதியான லக்கி லெட்பி ஆயுட்காலச் சிறைத் தண்டனையை பிரிட்டன் நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.

செஸ்டன் மருத்துவமனையில் பணியாற்றி 33 வயதுடைய  தாதி லெட்பி ஏழு குழந்தைகளைக் கொலை செய்ததற்காகவும் மேலும் ஆறு குழந்தைகளை கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

லெட்பி வேண்டுமென்றே குழந்தைகளுக்கு காற்றை செலுத்தினார். 

குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக பால் ஊட்டினார். இரண்டு குழந்தைகளுக்கு இன்சுலின் விசம் ஏற்றினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிந்த நிலையில் அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட நீதிமன்ற அமர்வில் லெட்பி சமூகமளிக்க மறுத்துவிட்டார்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒன்று என்ற கணக்கில் லெட்பிக்கு பல முழு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. 

இது போன்ற தண்டனையைப் பெற்ற இங்கிலாந்து வரலாற்றில் நான்காவது பெண் இவராவார்.

ஜூன் 2015 மற்றும் ஜூன் 2016 க்கு இடையில் லெட்பியின் செயல்களின்  கொடுமை மற்றும் கணக்கீடு உண்மையில் பயங்கரமானது என்று நீதிபதி  ஜஸ்டிஸ் கோஸ் கூறினார்.

குழந்தைகளை வளர்ப்பது , பராமரிப்பது போன்ற சாதாரண மனித உள்ளுணர்விற்கு முற்றிலும் முரணான வகையில் நீங்கள் நடந்து கொண்டீர்கள்.

மேலும் மருத்துவம் மற்றும் கவனிப்புத் தொழில்களில் பணிபுரிபவர்கள் மீது அனைத்து குடிமக்களும் வைத்திருக்கும் நம்பிக்கையை முற்றிலும் மீறுகிறது என்று அவர் கூறினார்.

இந்த விசாரணையின் போது, ​​உங்கள் தவறுக்கு எந்தப் பொறுப்பையும் நீங்கள் வெளிப்படையாக மறுத்துவிட்டீர்கள் என்று நீதிபதி  குறிப்பிட்டார்.

ஆதாரம்: Washington Post

தொடர்புடைய செய்திகள்

+ - reset