செய்திகள் உலகம்
புதிய வகை கோவிட் தொற்று கண்டுபிடிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
வாஷிங்டன்:
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவி பல உயிர்களைக் கொன்றது.
இந்தத் தொற்று அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை தொற்றாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களைத் தாக்கி வருகிறது.
கோவிட்-19-இன் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கோவிட்-19 ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள இந்தப் புதிய வகை தொற்றுக்கு பிஏ.2.86 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தொற்றின் வீரியம் மற்றும் பரவலைக் கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) தெரிவித்துள்ளது.
கோவிட்-19-யை ஏற்படுத்தும் தொற்றின் புதிய வகை ஒன்றை சி.டி.சி. கண்காணித்து வருகின்றது. இந்த வகைக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டு உள்ளது என சி.டி.சி. கூறியுள்ளது.
இந்தத் தொற்று குறித்த மேலும் பல்வேறு தகவல்களைச் சேகரித்து வருவதாக கூறியுள்ள சி.டி.சி., அது குறித்து விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய தொற்று தொடர்பாக உலக நாடுகளுக்கு உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அஷ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm