நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஞானவாபி மசூதி விவகாரத்தை பேசி தீர்க்க வருமாறு ஹிந்து அமைப்பு அழைப்பு

புது டெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாக பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக சமரச தீர்வு காண முன்வருமாறு ஹிந்து அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கோயிலை இடித்து ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மசூதி முழுவதும் ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மசூதி தரப்பினர் பல முறை முறையிட்டும் ஆய்வுக்கு தடை கிடைக்கவில்லை.

மசூதியை காப்பாற்ற அதன் நிர்வாகிகள் பல ஆண்டுகளாக சட்டப் போராட்டதை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கு தொடர்ந்துள்ள ஹிந்து அமைப்பு சார்பில் மசூதியை நிர்வகித்து வரும் குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், நீதிமன்றத்துக்கு வெளியே இந்தப் பிரச்சனைக்கு பேச்சு மூலம் தீர்ண காண வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset