செய்திகள் இந்தியா
மும்பையில் சிக்கனுடன் எலியை வழங்கிய உணவகம்: 3 பேர் கைது
மும்பை:
மும்பையில் உள்ள பிரபல தாபா உணவகத்தில் சிக்கனுடன் சேர்த்து எலியும் வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக உணவகத்தின் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வங்கி அதிகாரி ஒருவர் மும்பை புறநகரான பாந்த்ரா பகுதியில் பிரபல பஞ்சாபி உணவகத்துக்கு சென்று சிக்கன் கேட்டு சாப்பிட்டுள்ளார். அந்த உணவில் சிக்கனுடன் உயிரிழந்த சிறிய எலியும் இருந்தது.
தொடக்கத்தில் அதை அவர் கவனிக்காத நிலையில், பின்னர் அவருக்கு சந்தேகம் எழுந்தது.
தான் உண்டது எலி என்பதை அறிந்தவுடன் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உணவகப் பணியாளர்களிடம் அவர் புகார் அளித்த நிலையில், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த உணவகத்தின் நிர்வாகம், அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
எனினும் அவருக்கு உடல் நலக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, உணவகத்தின் மேலாளர், 2 சமையல் கலைஞர்கள் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am