நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அஜீத் பவாரை ரகசியமாக சந்தித்தது ஏன்?: சரத்பவாருக்கு காங்கிரஸ் கேள்வி

மும்பை:

தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்தி பாஜகவுடன் சேர்ந்து துணை முதல்வரான அஜீத் பவாரை ரகசியமாக சந்தித்தது ஏன்? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சரத் பவாரின் அண்ணன் மகன் அஜீத் பவாராவார். அஜீத் பவார் மற்றும் அவரது தலைமையிலான அணியினர் அடிக்கடி சரத் பவாரை சந்தித்து வருகின்றனர்.

இது சரத் பவாரை தங்கள் பக்கம் இழுக்கும் அவர்களது முயற்சி என்பதை சரத் பவாரும் ஒப்புக் கொண்டார். எனினும், பாஜக கூட்டணிக்கு செல்வதில்லை என சரத் பவார் உறுதியாக கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அஜீத் பவார் போன்ற பாஜகவுடன் கைகோத்துள்ள தலைவர்களை சரத் பவார் சந்திப்பது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும், சரத் பவாரும், அஜீத் பவாரும் புணேயில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நள்ளிரவில் ரகசிய சந்திப்பு நடத்த காரில் சென்ற விடியோ வெளியாகியது. இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் மட்டுமல்ல இந்தியா கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset