நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சுதந்திரத் தினத்தையொட்டி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி

டெல்லி :

இந்தியாவின் 77-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. சுதந்திரத் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின், பிரதமர் செங்கோட்டை சென்றார். அவரை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர், பாதுகாப்பு செயலர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், முப்படை மற்றும் டெல்லி போலீஸின் அணி வணக்கத்தைப் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, முப்படைகளில் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். 21 குண்டுகள் முழங்க தேசிய வணக்கம் செலுத்தினார். தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மீது மலர் தூவப்பட்டது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset