நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா - UAE கடற்படை கூட்டு போர்ப் பயிற்சி

புது டெல்லி: 

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடற்படைகள் துபை கடல் பகுதியில் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன.

இரு நாட்டு போர் தந்திரங்கள், தொழில்நுட்பங்கள், விரிவான இயக்க நடைமுறைகள் ஆகியவை இந்த பயிற்சியின்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மிகப் பெரிய போர்க் கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய ஐஎன்எஸ் திரிகண்ட் போர்க் கப்பல்கள் இந்த கூட்டு போர்ப் பயிற்சியில் பங்கேற்றன.

இரு நாடுகளிடையேயான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு போர்ப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய போர் கப்பல்கள் துபையின் ரஷித் துறைமுகத்தைச் சென்றடைந்தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset