நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துனீசியா அருகே படகு கவிழ்ந்து 41 அகதிகள் பலி

ரோம்:

துனீசியா அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 41 அகதிகள் உயிரிழந்தனர்.

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனீசியாவிலிருந்து இத்தாலியைக்கு சென்ற அகதிகள் படகு, சிசிலி நீரிணைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்துப் பகுதியிலிருந்து 4 பேரை மால்ட்டா நாட்டின் சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் மீட்டனர்.

2 ஆண், ஒரு பெண், பெரியவர்கள் துணை இல்லாத ஒரு சிறுவர் ஆகிய அந்த 4 பேரும், இத்தாலிய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களை சிசிலி தீவான லாம்பெடுஸாவிலுள்ள முகாமுக்கு இத்தாலிய கடலோரக் காவல் படையினர்  அழைத்து வந்தனர்.

கடலில் கவிழ்ந்த படகில் மேலும் 41 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset