நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான் இளைஞரை திருமணம் செய்த இந்திய பெண்ணின் விசா நீட்டிப்பு

பெஷாவர்:

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தான் இளைஞரை, திருமணம் செய்துகொண்ட இந்திய பெண்ணின் விசாவை பாகிஸ்தான் அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த  அஞ்சு (34), தனது கணவர், 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லாவுடன் ஃபேஸ்புக்கில் கடந்த 2019இல் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

நஸ்ருல்லாவைச் சந்திப்பதற்காக  வாகா-அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அவர் சென்றார்.

இஸ்லாமுக்கு மாறி தனது பெயரை ஃபாத்திமா என மாற்றிக்கொண்ட அவர், நஸ்ருல்லாவை கடந்த ஜூலை 25ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், அஞ்சுவின் விசா ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அஞ்சுவின் விசா ஆகஸ்ட் 20ஆம் தேதி காலாவதியாகிறது.

முன்னதாக, இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட விசா, தற்போது, ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன என்றார்.

இந்தத் தம்பதிக்கு ஒரு வீட்டுமனையும் பணமும் ஒரு மனை வணிக நிறுவனம் சார்பில் திருமண பரிசாக கடந்த மாதம் அளிக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset