நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷிய போர்க் கப்பலை தாக்கிய உக்ரைனின் ட்ரோன் படகு

மாஸ்கோ:

கருங்கடலில் ரஷிய போர்க் கப்பலை ட்ரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

எனினும், அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ரஷியா கூறியுள்ளது.
இது குறித்து  உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில்,

கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ரஷியாவின் நோவோரொஸிஸ்க் துறைமுகத்தில் கடல்வழி ட்ரோன்கள் மூலம் உக்ரைன் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதில், ரஷிய கடற்படைக்குச் சொந்தமான ஒலெனெகோர்ஸ்கி கார்னியாக் கப்பல் பலத்த சேதமடைந்து கப்பலை இனி போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

துறைமுகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒலெனெகோர்ஸ்கி கார்னியாக் உள்ளிட்ட கடற்படைக் கப்பல்கள் இரு உக்ரைனின் படகு ட்ரோன்களைத் தாக்கி அழித்தன.
உக்ரைன் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என  என்று ரஷியா தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset