நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் கன மழை: வெள்ளத்தில் கார்கள் அடித்து சென்றன

பெய்ஜிங்:

சீன தலைநகர் பெய்ஜிங்கைச் சுற்றிலும் கன மழை பெய்து வருகிறது. வெள்ளப் பெருக்கில் நெடுஞ்சாலைப் பாலமொன்று2 கார்களுடன் அடித்துச் செல்லப்பட்டது.

இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான பெய்ஜிங் நியூஸ் நாளிதழ் கூறுகையில்,  
ஹேய்லாங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின்-முடன்ஜியாங் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலமொன்று, கனமழை வெள்ளத்தில் வியாழக்கிழமை அடித்துச் செல்லப்பட்டது.

அந்தப் பாலத்திலிருந்த இரு கார்கள் ஆற்றுக்குள் விழுந்தன. எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பது குறித்து உடனடி தகவல் இல்லை என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.

சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கில்  இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset