செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை
சென்னை:
தக்காளி விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.140-க்கு விற்பனை ஆனது.
தமிழகத்தை பொறுத்தவரை தக்காளி விளைச்சல் குறைவு. மாநிலத் தேவைக்கு ஆந்திரா, கர்நாடக எல்லையோர மாவட்டங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. கடந்த ஒரு மாதமாக ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடந்த இரு மாதங்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது.
அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகள், நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்கப்பட்டாலும், அதன் விலை குறையவில்லை.
இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் நேற்று தக்காளி விலை கிலோ ரூ.140 ஆக உயர்ந்திருந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.160-க்கு மேல் விற்பனையாகி வருகிறது.
இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, ‘‘வட மாநிலங்களிலும் கன மழையால் தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. அம்மாநில வியாபாரிகள், கோயம்பேடுக்கு தக்காளி அனுப்பும் விவசாயிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
இதனால், தக்காளியை கோயம்பேடுக்கு கொண்டு வருவதில் கடும் போட்டி நிலவுகிறது. தற்போது தேனி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத் தொடங்கியுள்ளது. அது எத்தனை நாட்களுக்கு வரும் என்பது தெரியவில்லை. தொடர்ந்து வந்தால்தான் விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:54 am
தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டது: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை
May 5, 2024, 10:48 am
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
May 4, 2024, 2:50 pm
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am