நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்: சந்திராயன்-3 விண்கலத்தின் பாகமா?

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் மேற்கிலுள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் பெரிய அளவிலான உலோக பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

மேலும், அபாயகரமான பொருளிலிருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்நிலையில், மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி விண்கலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்தப் பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ஆஸ்திரேலியக் கடற்கரையில் ஒதுங்கிய அந்தப் பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று போலீசார்  தெரிவித்தனர். 

இந்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ராக்கெட் பாகம் போன்று உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset