செய்திகள் தொழில்நுட்பம்
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
ஸ்ரீஹரிகோட்டா:
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், "திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இனி எல்லாம் சரியாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். 'மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்' என்று ஆங்கிலத்தில் அவர் உரையைத் தொடங்கியதும் அரங்கில் கரகோஷம் எழுந்தது.
தொடர்ந்து பேசிய சந்திரயான்-3 திட்ட இயக்குநர் மோகன் குமார், "சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2024, 10:35 am
செல்போன் டவருக்குப் பதிலாக செயற்கைகோள் மூலம் கைப்பேசிகளை இயக்கும் சோதனையில் சீனா வெற்றி
April 14, 2024, 8:56 pm
விண்வெளிக்கு சுற்றுலா செல்கிறார் இந்தியர்
April 4, 2024, 6:50 am
இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியது
March 15, 2024, 1:11 pm
Open Ai நிறுவனத்தின் விடியோ உருவாக்கும் செய்யறிவு செயலி வருகிறது
March 8, 2024, 5:36 pm
மின்சார வாகனங்களால் காற்று மாசு அதிகம் - ஆய்வில் தகவல்
March 6, 2024, 10:46 am
உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்: பயனர்கள் தவிப்பு
February 28, 2024, 7:30 pm
ரூ.100இல் கேன்சர் தடுப்பு மாத்திரை: டாடா ஆய்வு நிறுவனம் சாதனை
February 24, 2024, 4:32 am
X mail வருகிறது: Gmail சகாப்தம் முடிகிறதா?
February 22, 2024, 5:15 pm