செய்திகள் உலகம்
ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்புக்கு எதிராக ஐ.நா.வில் பாகிஸ்தான் தீர்மானம்: மலேசியா, இந்தியா ஆதரவு
ஜெனீவா:
ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்துக்கு மலேசியா, இந்தியா, வங்கதேசம், சீனா, கியூபா, மாலத்தீவு, கத்தார், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 28 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்பட 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பை 7 நாடுகள் புறக்கணித்தன.
வன்முறையைத் தூண்டும் வகையில் மத வெறுப்புக்குக் காரணமான செயல்பாடுகளைத் தடுக்கவும், அவற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடையாக உள்ளவற்றை அடையாளம் காணும் வகையில் உறுப்பு நாடுகள் தங்களது சட்டங்கள், கொள்கைகள், சட்ட அமலாக்கத்தை ஆராய வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் வோல்கர் தூர்க் கூறுகையில், கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ள திருக்குர்ஆனை எரித்த சம்பவத்தையடுத்து இந்தத் தீர்மானம் விவாதிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே பிளவை ஏற்படுத்தவும் கோபத்தை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையிலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்றார்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த மாதம் ஹஜ்ஜுப் பண்டிகையையொட்டி அரசு அனுமதியுடன் நடைபெற்ற போராட்டத்தில் அங்குள்ள மசூதிக்கு வெளியே இராக் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் திருக் குர்ஆனை தீயிட்டு எரித்தார். இந்த சம்பவத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am