செய்திகள் இந்தியா
தப்ரேஸ் அன்சாரி கொலை: 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
புது டெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019இல் நிகழ்ந்த கும்பல் கொலை சம்பவத்தில் உயிரிழந்த தப்ரேஸ் அன்சாரி வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செரைகேலா கர்சவான் மாவட்டத்தைச் சேர்ந்த தப்ரேஸ் அன்சாரி, மகாராஷ்டிரத்தின் புணேவில் வேலைப்பார்த்து வந்தார்.
இவர் 2019இல் ரமலான் பண்டிகையொட்டி தனது சொந்த ஊருக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளை அவர் திருடியதாகச் சந்தேகப்பட்ட நபர்கள், அவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கினர்.
"ஜெய் ஸ்ரீ ராம்', "ஜெய் ஹனுமான்' எனக் கூறும்படி அன்சாரியை அவர்கள் வற்புறுத்தினர். இந்தச் சம்பவத்தையடுத்து 5 நாள்களுக்குப் பின் படுகாயங்கள் காரணமாக அன்சாரி உயிரிழந்தார்.
ரமலானுக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த தப்ரேஸ் அன்சாரியை அடித்தே கொன்றார்கள்
அப்போது மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்த நிலையில், இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் சேகர் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304}இன்கீழ் குற்றவாளிகள் 10 பேருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா ரூ.15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2024, 9:06 am
நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை: NTA விளக்கம்
May 8, 2024, 10:59 pm
ஈரானில் இருந்து தப்பி மீன்பிடிபடகில் கேரளம் வந்த 6 தமிழர்கள் கைது
May 8, 2024, 10:43 pm
வாக்காளர்களை மிரட்டும் வகையில் விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப் பதிவு
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am
இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி
May 7, 2024, 8:33 am
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm