செய்திகள் உலகம்
இந்தியா - இலங்கை விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்படும்
கொழும்பு:
இந்தியா - இலங்கை இடையேயான விமானப் போக்குவரத்து இணைப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான ஆலோசனைக்கு பிறகு இந்தியாவின் தூதர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
இந்த ஆலோசனையின்போது, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் விமான நிறுவனங்களும் இலங்கைக்கு அதிக அளவில் பயணிகள் விமானங்களை இயக்க ஆர்வம் தெரிவிப்பதாக தூதர் பாக்லே குறிப்பிட்டார்.
தென் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை இயக்கப்படும் பயணிகள் விமானங்களை ரத்மலானை விமான நிலையம் வரையில் இயக்கவும், விமானச் செயல்பாடுகளை மேலும் அதிகரிக்கவும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் விரும்புகிறது எனவும் தூதர் பாக்லே தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு 4 பில்லியன் டாலர் வரை இந்தியா உதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm