நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியா - இலங்கை விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்படும்

கொழும்பு: 

இந்தியா - இலங்கை இடையேயான  விமானப் போக்குவரத்து இணைப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான ஆலோசனைக்கு பிறகு இந்தியாவின் தூதர்  கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்த ஆலோசனையின்போது, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் விமான நிறுவனங்களும் இலங்கைக்கு அதிக அளவில் பயணிகள் விமானங்களை இயக்க ஆர்வம் தெரிவிப்பதாக தூதர் பாக்லே குறிப்பிட்டார்.

தென் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை இயக்கப்படும் பயணிகள் விமானங்களை ரத்மலானை விமான நிலையம் வரையில் இயக்கவும், விமானச் செயல்பாடுகளை மேலும் அதிகரிக்கவும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் விரும்புகிறது எனவும் தூதர் பாக்லே  தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு 4 பில்லியன் டாலர் வரை இந்தியா உதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset