நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீனர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி

ஜெருசலேம்: 

மேற்குக் கரை பகுதியில் யூதக் குடியிருப்பு அருகே பெட்ரேல் நிலையத்தில் பாலஸ்தீனர் ஒருவர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.

பாலஸ்தீன நகரான ரமல்லாவுக்கு கிழக்கே ஏலி என்றுமிடத்தில் அமைந்துள்ள யூதக் குடியிருப்பு அருகே, பெட்ரேல் நிலையத்தில் ஒருவர் சரமாரி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.

துப்பாக்கியால் சுட்ட நபரை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் சுட்டனர்.

அவருக்கு உதவியாக வந்த மற்றொரு நபரை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் படையினரால் சுடப்பட்ட பாலஸ்தீனரின் நிலைமை குறித்து உடனடி தகவல் இல்லை.

இது குறித்து வெளியான படங்களில் அவர் குண்டடி பட்டு தலைகுப்புற கவிழ்ந்திருப்பதும், அவரிடம் எம்16 ரக துப்பாக்கி இருப்பதும் பதிவாகியுள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset