நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போலி தங்க சங்கிலியை வழிப்பறி செய்த கொள்ளையன்; பாதிக்கப்பட்ட பெண் சிரித்தார் 

ஹனோய்: 

வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்துக்கொண்டிருந்த பெண்மணியிடம் வழிப்பறி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

இந்த சம்பவத்தில் அந்த பெண்மணியின்  தங்க சங்கிலியை ஆடவன் ஒருவன் வழிப்பறி செய்தான். 

இந்நிலையில், தன்னிடம் வழிப்பறி செய்த ஆடவனிடம் சம்பந்தப்பட்ட பெண்மணி  வேகமாக சிரித்தாள். காரணம், வழிப்பறி செய்யப்பட்ட தங்க சங்க போலியானது என்று தெரிய வந்தது. 

இந்த சம்பவம் அடங்கிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைத்துலக ஊடகங்களில் பேசுப்பொருளானது. 

பாதிக்கப்பட்ட பெண்மணியோ சத்தமாக சிரித்ததுடன் வழிப்பறி மேற்கொண்ட ஆடவனிடம்  உரக்க சத்தமிட்டு ஏதோ ஒன்றை கூறினார் என்று தெரிகிறது. 

பின்னர், அம்மாது போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை மேற்கொண்ட வேளையில் வழிப்பறி செய்யப்பட்ட நகைகள் யாவும் போலியானவை என்பதையும் ஒப்புக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset