செய்திகள் உலகம்
உக்ரைன் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நிவாரணம்: ரஷியா தடுப்பதாக ஐ.நா. குற்றச்சாட்டு
கீவ்:
உக்ரைனில் அணை உடைந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல ரஷியா அனுமதி மறுப்பதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா. நிவாரணப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் டெனைஸ் பிரவுன் தெரிவிக்கையில், நோவா ககோவா அணை உடைப்பால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்காக உக்ரைன் மற்றும் ரஷிய அரசுகளை தனித்தனியாக அணுகினோம். ஆனால், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல எங்களுக்கு ரஷிய அரசு அனுமதி மறுத்துவிட்டது என்றார்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
அந்தப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் அண்மையில் எதிர்த் தாக்குதலைத் தொடங்கியது. இந்த நிலையில், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவா நகரில் நீப்ரோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை கடந்த மாதம் 28 தேதி தகர்க்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm