செய்திகள் உலகம்
நேப்பாளத்தில் கனமழையால் மரண எண்ணிக்கை 17ஆக உயர்வு; 37 பேர் மாயம்
காத்மண்டு:
நேப்பாள நாட்டின் கிழக்குப் பகுதியில், தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் ஓடியது. கனமழையைத் தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கனமழையால் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.
அந்நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். இதனால், பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் சங்குவாஷபா மாவட்டத்தில் ஹிவா ஆற்றில் நடந்து வந்த நீர்மின்சார திட்ட கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
கனமழையில் சிக்கி அவர்களில் ஒரு தொழிலாளர் உயிரிழந்துள்ளார். அவர் கண்டெடுக்கப்பட்டார்.
37 ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர். இந்தப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இயந்திரங்கள் மற்றும் பிற சாதனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
தேபிள்ஜங் மாவட்டத்தில், வீடுகள் பல அடித்து செல்லப்பட்டுள்ளன. இதில் சிக்கி, மற்றொரு நபர் உயிரிழந்துள்ளார். வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 3 பேரைக் காணவில்லை.
இதுவரை மொத்தம் 17 பேர் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். 37 பேரை இன்னும் காணவில்லை.
இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், நீர்மட்டம் உயரக் கூடும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆதாரம்: Nepal Times
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm