செய்திகள் இந்தியா
மணிப்பூரில் மீண்டும் வன்முறை 3 பேர் பலி
இம்பால்:
மணிப்பூரில் நேற்று மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த வன்முறை காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கங்சுப் என்ற இடத்தில் ஆயுதம் ஏந்திய போராட்டக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உடல்நிலை தேறி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்த்தி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், மெய்த்தி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்தை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 3ம் தேதி பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் திடீர் திடீரென வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையிலான விசாரணை ஆணையத்தை மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமித்தது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
குக்கி சமூகத்தவர்களை காப்புக் காடுகளில் இருந்து வெளியேற்ற அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து அம்மாநிலத்திற்கு 4 நாள் பயணமாகச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு இரு சமூகங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மணிப்பூரில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே அரசின் முன்னுரிமை என தெரிவித்தார் அமித் ஷா,
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:03 pm
மம்தா அளித்த உறுதிமொழி: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட கொல்கத்தா மருத்துவர்கள்
October 22, 2024, 8:09 am
ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை தாக்கியவர் வீட்டை புல்டோசர் மூலம் இடித்த ராஜஸ்தான் அரசு
October 22, 2024, 7:58 am
தில்லியில் மர்மப் பொருள் வெடிப்பு: உச்சகட்ட பாதுகாப்பு
October 22, 2024, 7:54 am
பத்மநாப சுவாமி கோயில் வெண்கலப் பாத்திரம் திருட்டு: தெரியாமல் எடுத்ததாக மருத்துவரை விடுவித்த கேரள போலிஸ்
October 22, 2024, 6:52 am
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி
October 19, 2024, 5:53 pm
1 கோடி ரூபாயை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்
October 19, 2024, 3:37 pm
பன்னுவை கொலை செய்யும் முயற்சியில் ரா அதிகாரிக்கு தொடர்பு: அமெரிக்கா குற்றச்சாட்டு
October 18, 2024, 7:12 pm
விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தடுக்க கடும் சட்டம்
October 18, 2024, 3:36 pm
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலத்தை 60 நாள்களாகிறது
October 18, 2024, 9:05 am