செய்திகள் மலேசியா
உள்ளூர் தொழிலாளர்களின் நெருக்கடியை தீர்க்க சம்பளத்தை உயர்த்துவதே சிறந்த வழி: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
பினாங்கு:
கோவிட்-19 தொற்று நோயின் மோசமான விளைவுகளிலிருந்து மலேசியா படிப்படியாக விடுப்பட்டு வரும் நிலையில், நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஊதியத்தை உயர்த்துவதே மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும் என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.
இப்போது கிட்டத்தட்ட முழு வேலை வாய்ப்பை பதிவு செய்திருந்தாலும், தற்போதைய வேலையின்மை விகிதம் 3.5% ஆக இருப்பதால், நாடு பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளான உற்பத்தி, தோட்டங்கள், சேவை துறைகளில்
தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
நாட்டில் தற்போது 800,000 வேலைகள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது
உள்ளூர் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமான 1,500 வெள்ளி சம்பளத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊதியத்தை உயர்த்துவதுதான் சிறந்த் வழிமுறை என்ற கருத்தை மனிதவள அமைச்சு பகிர்ந்து கொள்கிறது
மனிதவள அமைச்சின் தரவுகளின்படி, இப்போது 18 லட்சம் ஆற்றல் மிக்க மலேசியர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக வேலை செய்கிறார்கள்,.
அவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான சிங்கப்பூரில் உள்ளனர்.
அவர்களைத் திரும்பப் பெற, தற்போதைய வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க ஊதியத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் செயல்பாட்டுத் திட்டமிடலில் புதுமையானதாக இருக்கும் என்று முதலாளிகளை மனிதவள அமைச்சர் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இரு தினங்களுக்கு பினாங்கு பட்டர்வொர்த்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சி மையம் வேலை தேடும் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 12:40 am
ஐநா உலக தியான தினம் 123 நாடுகளில் ஒரே நேரத்தில் அனுசரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
December 21, 2025, 3:52 pm
பிபாவின் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான சிறப்புக் குழுவில் டத்தோ சிவசுந்தரம் நியமனம்
December 21, 2025, 2:23 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி, மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல: டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதி
December 21, 2025, 1:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவெடுப்போம்: ஜாஹித்
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
