செய்திகள் மலேசியா
உள்ளூர் தொழிலாளர்களின் நெருக்கடியை தீர்க்க சம்பளத்தை உயர்த்துவதே சிறந்த வழி: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
பினாங்கு:
கோவிட்-19 தொற்று நோயின் மோசமான விளைவுகளிலிருந்து மலேசியா படிப்படியாக விடுப்பட்டு வரும் நிலையில், நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஊதியத்தை உயர்த்துவதே மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும் என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.
இப்போது கிட்டத்தட்ட முழு வேலை வாய்ப்பை பதிவு செய்திருந்தாலும், தற்போதைய வேலையின்மை விகிதம் 3.5% ஆக இருப்பதால், நாடு பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளான உற்பத்தி, தோட்டங்கள், சேவை துறைகளில்
தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
நாட்டில் தற்போது 800,000 வேலைகள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது
உள்ளூர் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமான 1,500 வெள்ளி சம்பளத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊதியத்தை உயர்த்துவதுதான் சிறந்த் வழிமுறை என்ற கருத்தை மனிதவள அமைச்சு பகிர்ந்து கொள்கிறது
மனிதவள அமைச்சின் தரவுகளின்படி, இப்போது 18 லட்சம் ஆற்றல் மிக்க மலேசியர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக வேலை செய்கிறார்கள்,.
அவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான சிங்கப்பூரில் உள்ளனர்.
அவர்களைத் திரும்பப் பெற, தற்போதைய வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க ஊதியத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் செயல்பாட்டுத் திட்டமிடலில் புதுமையானதாக இருக்கும் என்று முதலாளிகளை மனிதவள அமைச்சர் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இரு தினங்களுக்கு பினாங்கு பட்டர்வொர்த்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சி மையம் வேலை தேடும் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 6:42 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மித்ரா மானியம் மறு பரிசீலனை செய்யப்படும்: பிரபாகரன்
April 20, 2024, 2:54 pm
பாலர் பள்ளி, உயர்கல்வி மாணவர்கள், சிறுநீரக நோயாளிகளுக்கு மித்ரா நிதி வழங்கப்படும்: பிரபாகரன்
April 20, 2024, 2:42 pm
சாலையோரத்தில் சுயநினைவின்றி கிடந்த தாதியர்; நெகிரி செம்பிலானில் பரபரப்பு
April 20, 2024, 2:04 pm
ஆதரவு அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்ற எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை: பிரதமர்
April 20, 2024, 12:34 pm
விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 20, 2024, 12:32 pm
ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை டத்தோஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்தார்
April 20, 2024, 12:08 pm
கோல குபு பாருவில் வேட்பாளரை வெற்றி பெற ஒற்றுமை அரசாங்கம் சரியான வழிமுறையைக் கொண்டுள்ளது: ஜாஹித்
April 20, 2024, 11:20 am
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மசீச பரப்புரை மேற்கொள்ளாது
April 20, 2024, 11:16 am