
செய்திகள் மலேசியா
உள்ளூர் தொழிலாளர்களின் நெருக்கடியை தீர்க்க சம்பளத்தை உயர்த்துவதே சிறந்த வழி: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
பினாங்கு:
கோவிட்-19 தொற்று நோயின் மோசமான விளைவுகளிலிருந்து மலேசியா படிப்படியாக விடுப்பட்டு வரும் நிலையில், நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஊதியத்தை உயர்த்துவதே மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும் என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.
இப்போது கிட்டத்தட்ட முழு வேலை வாய்ப்பை பதிவு செய்திருந்தாலும், தற்போதைய வேலையின்மை விகிதம் 3.5% ஆக இருப்பதால், நாடு பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளான உற்பத்தி, தோட்டங்கள், சேவை துறைகளில்
தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
நாட்டில் தற்போது 800,000 வேலைகள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது
உள்ளூர் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமான 1,500 வெள்ளி சம்பளத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊதியத்தை உயர்த்துவதுதான் சிறந்த் வழிமுறை என்ற கருத்தை மனிதவள அமைச்சு பகிர்ந்து கொள்கிறது
மனிதவள அமைச்சின் தரவுகளின்படி, இப்போது 18 லட்சம் ஆற்றல் மிக்க மலேசியர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக வேலை செய்கிறார்கள்,.
அவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான சிங்கப்பூரில் உள்ளனர்.
அவர்களைத் திரும்பப் பெற, தற்போதைய வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க ஊதியத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் செயல்பாட்டுத் திட்டமிடலில் புதுமையானதாக இருக்கும் என்று முதலாளிகளை மனிதவள அமைச்சர் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இரு தினங்களுக்கு பினாங்கு பட்டர்வொர்த்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சி மையம் வேலை தேடும் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 8:06 pm
விபத்தில் மரணமடைந்த மாணவி நிமலா சங்கரி குழும்பத்தாருக்கு யூனிமேப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது
September 17, 2025, 7:02 pm
முஸ்லிம் அல்லாத கட்சிகளால் பாஸ் எளிதில் குழப்பமடையக் கூடாது: டத்தோஸ்ரீ ரமணன்
September 17, 2025, 6:34 pm
ஷாரா அழுததுடன் திருடியதை மறுத்தார்; கடவுள் மீது சத்தியம் செய்தார்: சாட்சி
September 17, 2025, 6:32 pm
எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் படிப்புகளுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும்: நிக் நஸ்மி
September 17, 2025, 6:31 pm
112 இடங்களை வெல்ல முடியாத கட்சிகள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் அர்த்தமில்லை: துன் மகாதீர்
September 17, 2025, 6:29 pm
பாஸ் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பெர்சத்து நிதியே காரணம்: மார்சுக்கி
September 17, 2025, 6:28 pm
ரபிசியின் மகனைத் தாக்கியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை; சிசிடிவி தெளிவாக இல்லை: ஐஜிபி
September 17, 2025, 1:27 pm
ஷாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்
September 17, 2025, 1:25 pm
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்
September 17, 2025, 1:24 pm