நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

சவூதி அரேபிய விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

கேப் கனாவெரல்: 

சவூதி அரேபியா, அமெரிக்கா விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்.

இதில் இரு நாடுகளைச் சேர்ந்த தலா 4 வீரர்கள் இருந்தனர்.

சர்வசே  விண்வெளி நிலையத்தில் 9 நாள் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த அவர்களுடன் புறப்பட்ட அந்த விண்கலம், 9 மணி நேரத்துக்குப் பிறகு பூமிக்குத் திரும்பி மெக்ஸிகா வளைகுடாவில் பாராசூட் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு இறங்கியது.

ஃபுளோரிடா மாகாணம், மெரிட் தீவிலுள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட அந்த விண்கலத்தில், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்ஸனுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் ஜான் ஷாஃப்னர், சவூதி அரேபிய விண்வெளி வீரர் அலி அல்கார்னி, வீராங்கனை ரயானா பர்னாவி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மே 22ஆம் தேதி சென்றிருந்தனர்.

இவர்களில் ரயானா பர்வானிதான் விண்வெளிக்குச் சென்ற சவூதி அரேபியாவின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset