செய்திகள் இந்தியா
செங்கோல் மூலம் ஆட்சி பரிமாற்றம் நடைபெறவில்லை: மோசடி பொய்களை பாஜக பரப்புகிறது
புது டெல்லி:
செங்கோல் பரிமாற்றத்தின் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா ஆட்சி அதிகாரத்தைப் பெற்றதற்கான எந்தவித வரலாற்று ஆவணமும் இல்லை, இதை வைத்து பாஜக மோசடி பொய்களை வெளியிடுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதன் மூலம் தமிழகத்தில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பிரதமர் மோடியும் அவரது ஆதரவாளர்களும் முற்படுகிறார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை செங்கோல் பரிமாற்றம் மூலம் அப்போது பண்டித ஜவாஹர்லால் நேரு பெற்றதாகவும், தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அந்த செங்கோல், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது மக்களவைத் தலைவரின் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், செங்கோல் மூலம் ஆட்சி அதிகார பரிமாற்றம் நடைபெற்றதாக லார்ட் மவுன்ட்பேட்டன், , ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி ஆகியோர் கூறியதாக பதிவு செய்யப்பட்ட எந்தவித வரலாற்று ஆவணங்களும் இல்லை.
இதுதொடர்பான பாஜகவின் அனைத்து முன்வைப்பும் மோசடிதான். தமிழகத்தில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பாஜக இவ்வாறு கூறி வருகிறது.
நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் அலாகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. செங்கோல் தொடர்பாக 1947, டிசம்பர் 14ஆம் தேதி அவர் தெரிவித்த கருத்து பொதுவெளியில் உள்ளது.
அதை மறைத்து தற்போது சிலர் தங்களின் கருத்துகளைப் பரப்பிவிட்டு தற்போது ஊடகங்களில் பெரிதுபடுத்துகின்றன. ராஜாஜியின் வரலாற்று ஆய்வாளர்களே இதுகுறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am