![image](https://imgs.nambikkai.com.my/new-parliament-building.jpg)
செய்திகள் இந்தியா
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
புது டெல்லி:
மே 28ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
1927ஆம் ஆண்டு கட்டப்பட்டு சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தில் இடப் பற்றாக்குறை உள்ளதால் புதிய நாடாளுமன்றம் பல ஆயிரம் கோடியில் கட்டப்பட்டது.
இதன்படி, 2020 இல் அடிக்கல் நாட்டப்பட்ட இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து மே 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்றும் ஹிந்து தேசியவாதி வி.டி.சாவர்க்கரின் பிறந்த தினமான மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிக்க போவதாக திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முறையாகப் பெற்றதும், புறக்கணிப்பு அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவோம் என 19 எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm