நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புதிதாக 8 நகரங்கள் உருவாக்க ஒன்றிய அரசு முடிவு

புது டெல்லி:

மக்கள்தொகை நெருக்கடிக்குத் தீர்வு காண, புதியதாக 8 நகரங்கள் உருவாக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய பிரதேசம் இந்தூரில் நகர்புறங்கள் 20 என்ற ஜி20 கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்புறங்கள் மேம்பாட்டுத் துறைக்கான ஜி20 பிரிவின் இயக்குநர் எம்.பி.சிங்,

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் நகரங்கள் உள்ளன. புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி, நகரத்தின் அடிப்படை கட்டமைப்புத் திட்டத்தைப் பாதிப்பதாக உள்ளது.

நாட்டில் புதிய நகரங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என 15ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை ஒன்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் அனுப்பியுள்ள 26 புதிய நகரங்கள் குறித்த முன்மொழிவுகள் ஆராயப்பட்டு, அவற்றில் 8 நகரங்களை மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நகரங்களுக்கான இடங்கள், அவற்றை உருவாக்குவதற்கான காலஅளவுகளை ஒன்றிய அரசு விரைவில் அறிவிக்கும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset