செய்திகள் உலகம்
மலேசியாவில் இசை அகாடமியை திறக்க சங்கர் மகாதேவன் திட்டம்: நம்பிக்கை நேர்காணலில் அறிவிப்பு
பூச்சோங்:
மலேசியாவில் இசை அகாடமியை திறக்க தாம் திட்டம் கொண்டுள்ளதாக பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் கூறியுள்ளார்.
மைஇவெண்ட்ஸ், மீடியா மெசன் இணை ஏற்பாட்டில் சங்கர் மகாதேவன் இசை விழா நாளை நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்காக சங்கர் மகாதேவன் மலேசியா வந்துள்ளார்.
இந்நிலையில் நம்பிக்கையின் சிறப்பு நேர்காணலில் அவர் கலந்து கொண்டு அறிவிப்பாளர் தயாளன் சண்முகத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
குறிப்பாக நாளைய இசை விழாவில் என்னுடை சூப்பர் ஹிட் பாடல்கள் மலேசிய ரசிகர்களுக்காக காத்திருக்கிறது.
அதோடு புகழ் பெற்ற சூப்பர் சிங்கர் பாடகர்கள், மணி அன்ட் பேன்ட் இசைக் குழுவினர் என அனைவரும் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளன.
மேலும் மலேசியாவை பற்றி பேசிய அவர், உலகிலேயே மிகச் சிறந்த உணவுகள் கிடைக்கும் நாடாக மலேசியா விளங்குகிறது.
அதற்காக மலேசியாவை நான் அதிகம் நேசிக்கிறேன்.
அதே வேளையில் மலாய் மொழியும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இங்குள்ள கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை பாடவும் விரும்புகிறேன்.
சிறந்த பாடகர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இசை அகாடமியை திறந்துள்ளேன்.
வாய்ப்பு கிடைத்தால் மலேசியாவிலும் ஒரு அகாடமியை திறக்க தாம் திட்டமிட்டுள்ளதாக சங்கர் மகாதேவன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm