நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்ததில் 39 பேர் மாயம் 

பெய்ஜிங்: 

இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர். 

சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர்.  அவர்களில் 17 பேர் சீன பிரஜைகள், 17 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 5 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களாகும். 

இதையடுத்து காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

-பார்த்திபன் நாகராஜன் 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset