செய்திகள் உலகம்
சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்ததில் 39 பேர் மாயம்
பெய்ஜிங்:
இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர்.
சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் 17 பேர் சீன பிரஜைகள், 17 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 5 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களாகும்.
இதையடுத்து காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm