நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் மரணம் 

வெலிங்டன் : 

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் 4 மாடி விடுதி ஒன்றில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. 

இந்தத் தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். 

தீ விபத்தில் இறந்தவர்களுக்குப் பிரதமர் கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-அஷ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset