நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் - அமெரிக்கா வரவேற்பு

வாஷிங்டன்: 

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இதில் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக இஸ்ரேல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவதற்கு எகிப்து அரசாங்கம் தனது நாட்டின் மூத்த அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியது. அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின்படி போரை நிறுத்துவதற்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்wiலையில் போர் நிறுத்தத்துக்கு வரவேற்பு அளிப்பதாகவும், இதற்கு உதவிய எகிப்து அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset