நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் எல்லை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

வாஷிங்டன் :

அமெரிக்காவில் கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த  அதிபர் டிரம்ப் டைடில்-42 என்ற கொள்கையை வெளியிட்டார். அந்தக் கொள்கையானது பொது சுகாதார நலன் கருதி புலம் பெயர்ந்தவர்களைத் திருப்பி அனுப்ப அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அந்தக் கொள்கை சமீபத்தில் காலாவதியானது. 

இந்த நிலையில் தற்போது அமெரிக்க நாடாளுமன்றம் எல்லை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை சுவர் கட்டும் பணியை மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது. மேலும் அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் நபர்களைத் தகுதி நீக்கம் செய்வதை அதிகரிக்கவும், விண்ணப்பங்களை மின்னணு முறையில் சரிபார்க்கவும் வழிவகை செய்கிறது. 

இது அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக மெக்சிகோ எல்லையில் காத்திருக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்குச் சுமையாக அமைந்துள்ளது.

-அஷ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset