
செய்திகள் தமிழ் தொடர்புகள்
அதிமுகவை விமர்சிக்கும் பாஜகவினர்; அண்ணாமலை பதிலளிக்க வேண்டும்: ஜெயக்குமார்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை மறுபரிசீலனை செய்யாவிட்டால், வழக்குத் தொடர்வோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
பொதுவாக, ஒரு ஆற்றின் முகத்துவார பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். அதுதான் மீனவர்களின் வாழ்வாதாரம். மெரினா கடற்கரை, முகத்துவாரத்தில்தான் உள்ளது.
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துசெல்லும் நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பது, கடற்கரையின் அடையாளத்தை இழக்கச் செய்யும்.
இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அனுமதி கொடுத்ததை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அதிமுக சார்பில் வழக்குத் தொடர்வோம்.
‘அதிமுகவில் தலைமை சரியில்லை. கட்சி 6-ஆக உடைந்துவிட்டது’ என்று பாஜக மாநிலப் பொருளாளர் சேகர் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த பிறகு, அதிமுக தரப்பில் யாரும் பாஜகவை விமர்சிப்பது இல்லை.
அந்த அளவுக்கு அதிமுகவினர் எல்லோரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இதுபோன்ற கட்டுப்பாடு, பாஜகவில் இல்லை. அவர்கள் தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறார்கள்.
அதிமுக கிளை செயலாளராக இருந்து, படிப்படியாக உயர்ந்து இன்று பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் பழனிசாமி.
இந்நிலையில், அவர்கள் அதிமுகவை விமர்சிப்பது ஏற்புடையதல்ல.
இதுகுறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்காது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm
செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு
September 9, 2025, 12:07 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
September 8, 2025, 6:16 pm