நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முகக்கவசம் அணியாமல் உணவைக் கையாண்ட ஊழியர்கள்: உணவகங்கள் மீது சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் 43 உணவுக் கடைகளில் பணிபுரிவோர் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாய் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் இம்மாதம் 14ஆம் தேதி வரை அமைப்பு 451 உணவுக் கடைகளில் சோதனைகளை நடத்தியது.
விளம்பரம்

அதில் உணவங்காடிகள், உணவகங்கள், உணவங்காடி நிலையங்கள், உணவுக் கண்காட்சிகள் ஆகியவை அடங்கும்.

குறிப்பாகப் பொதுமக்கள் புகாரளித்த கடைகள் மீது கவனம் செலுத்தப்பட்டதாய் அந்த அமைப்பு சொன்னது.

சோதனையின்போது 43 கடைகளில் உணவைக் கையாள்வோர், எச்சில் படாமல் இருப்பதற்கான முகக்கவசத்தை அணியாமல் இருந்தனர்.

ஈரச் சந்தைகளில் உடனடியாக உட்கொள்ளும் சமைத்த உணவை விற்பவர்கள் மட்டுமே முகக்கவசம் அணியவேண்டும் என்று அமைப்பு நினைவூட்டியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், விதிமுறைகளை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவர்களது உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்துச் செய்யப்படலாம்.

சிங்கப்பூரில் பிப்ரவரியில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், உணவைக் கையாள்பவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம்.

ஆதாரம் : CNA
ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset