செய்திகள் உலகம்
டொமினிக் ராப் ராஜினாமா: இங்கிலாந்தின் புதிய துணைப்பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்
லண்டன்:
டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார்.
இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே அறிவிப்பில், அலெக்ஸ் சாக் புதிய நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am